Monday, 25 December 2017

சுதந்திரம்

என்னை உருவாக்கிய நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்                         
சுதந்திரம்:
*************
பெற்ற தாயும்
நிலைகுலைதல் காண்பீரோ?
கூடிய மனைவியும்
மாற்றானுக்குச் சொந்தமாதல்
சரியாமோ?
பெற்ற பிள்ளைதனை
பேயிடம் தவிக்க
விடல் முறையாமோ?
நம் உழைப்பை
எத்திப் பிழைக்கும்
எத்தர்களை எட்டி
உதைக்காமல் ஏமாந்து
நிற்பதுவும் ஏனோ?
நெல்விளையும் கழனிகளை
காட்டெருமை அழிப்பதுகண்டு
மனம் பொறுத்திடுமோ?
பாதுகாத்த பன்னரும்
வளங்களை
பகைவன் அடைய
அனுமதிப்பதா?
உன் சிந்தையும்
சிதைந்து போனதோ?
கைகளும் கட்டுண்டதோ?
மெய்யும் உணர்விழந்து
ஒடுங்கிப் போனதோ?
புரையோடிப் போன
கண்களின் விழித்திரை
அகற்றிடு!
கூடி முழக்கமிட்டு
செல்லரித்துப் போன
சிந்தைதனைச் சீராக்கி
கைகளை ஒன்று
சேர்த்திடு!
வானமும் புவியும்
நிலவும் இரவியும்
காற்றும் மலையும்
யாவர்க்கும் பொதுவே!
இறைவன் படைப்பில்
யாவையும் சமமே!
மனிதனை மனிதன்
அடிமை கொள்ளுதல்
சிந்தையில்லா சிறுமைத்
தனமன்றோ!
சிந்தையில் ஒன்றாகி
செயலதனைச் செய்திடவே
கணப்பொழுதும் காத்திராமல்
இப்பொழுதே விரைந்திடு!
வீறுகொண் டெழுந்திடு!
வெற்றி உனதாக்கிடு!
சுதந்திரத் தாகம்தனை
சுவைத்தே தீர்த்திடு.!

   காரைக்குடி கிருஷ்ணா

Friday, 22 December 2017

வெற்றிச் சான்றிதழ்! என் சிந்தையைத் தூண்டிய நிலாச்சோறு குழுமத்திற்கு நன்றி.
----------------------------------------------------------
என்னவளே! இனியவளே!
எனது இதயத்தின்
கருமையத்தில் அன்பாய்!
குடிபுகுந்த முத்தே!
இனி நீ எனது
கண்ணாகவும் இரு!
கண்ணின் கருமணியின்
பாவையே நீ போய்விடு!
என்னவள் வந்துவிட்டாள்!
எனை வழிநடத்த!

எனது உயிரின் உயிரே!
நெஞ்சில் உறைந்த மன்னவனே!
அஞ்சுகிறேன் பதறுகிறேன்!
சூடான உணவதனை
நான் பார்க்கும்போதே!
சூரியனைக் கண்ட
பனிபோல் எனைவிட்டு!
பிரிந்து செல்வாயோவென்று!
.

வெற்றி அளித்த வரிகள்
************************
தலைப்பு : விதைகள்
-------------------------------
நாளைய நட்சத்திரங்கள்
இவர்கள்
நம்பிக்கையின் ஊற்றுகள்
வரலாறு படைக்கும்
ஆற்றல் உண்டு
விண்வரை சென்று
வெற்றிக்கனி பறிக்கும்
வீரக் குஞ்சுகள்
தடைகள் எதிர்ப்படின்
இவர்களிடம்
விடைகள் இருக்கு
அதைத் தகர்க்க
இளமைத் துடிப்பும்
இன்சொல் பேச்சும்
இவர்கள் மந்திரம்
முளையிலே கிள்ளிவிடாதீர்கள்
இவர்கள்
முளைவிடத் துடிக்கும்
இப்புவியின் வித்துகள்

        காரைக்குடி கிருஷ்ணா

உன் பாதச்சுவடுகளில்

வெற்றி அளித்த வரிகள் (சிப்பிக்குள் முத்து குழுமத்திற்கு நன்றி)

உன் பாதச்சுவடுகளில்;
*********************
நான் தவமிருக்கிறேன்
ஈராறு மாதங்களாய்
உயிராய் உண்மையாய்
எனதுடலை உருக்கி
எனது இதய அறையில்
உனை உள்ளே வைத்து
தினம் தினம் வணங்குகின்றேன்
உன் சுட்டுவிழிப் பார்வை
எனைச் சுற்றி சுற்றி
வலம் வாராதோ?
உனது திருவடிகளில்
நான் சரணடைகிறேன்
எனது குறைகளைப்
போக்கி
எனை ஏற்றுக் கொள்
என் மீதிக் காலம்
உனது பாதச் சுவடுகளை
முத்தமிட்டுக் கொண்டே
கழியட்டும்! விடியட்டும்!
இனி என் வாழ்வு.

     காரைக்குடி கிருஷ்ணா

குறள் வழி புதுக்கவிதை; வெற்றிச் சான்றிதழ்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;
*******************--*****************
உயிரும் உடலுமாய்
வாழ்ந்திருந்தோம்
நிலவும் வானுமாய்
சேர்ந்தே இருந்தோம்
வெந்நீராய் என் தேகம்
சுடுகின்றது
எனைவிட்டு நீ
பிரிந்தால்
பிரியாதே கண்ணா
நல்ல செய்தி
சொல்வாயோ
நீ எனை விட்டுப்
பிரிந்தால்
அடுத்த கணம்
உயிர் உடலை விட்டுப்
பிரிந்து
எனது உடல்
மண்ணோடு மண்ணாகும்
ஆதலால் உன் பிரிவை
இருப்பவரிடம் கூறிச் சொல்
பூவும் நாருமாய்
சேர்ந்தே இருப்போம்
இனி பிரிவேன்
என்ற செய்தியை
என் காதுகள்
ஏற்காது
எனைவிட்டுச் செல்லாதே
செல்லாதே என் ஆருயிரே!

Thursday, 21 December 2017

குறள் வழி புதுக்கவிதை; வெற்றிச் சான்றிதழ்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;
*******************--*****************
உயிரும் உடலுமாய்
வாழ்ந்திருந்தோம்
நிலவும் வானுமாய்
சேர்ந்தே இருந்தோம்
வெந்நீராய் என் தேகம்
சுடுகின்றது
எனைவிட்டு நீ
பிரிந்தால்
பிரியாதே கண்ணா
நல்ல செய்தி
சொல்வாயோ
நீ எனை விட்டுப்
பிரிந்தால்
அடுத்த கணம்
உயிர் உடலை விட்டுப்
பிரிந்து
எனது உடல்
மண்ணோடு மண்ணாகும்
ஆதலால் உன் பிரிவை
இருப்பவரிடம் கூறிச் சொல்
பூவும் நாருமாய்
சேர்ந்தே இருப்போம்
இனி பிரிவேன்
என்ற செய்தியை
என் காதுகள்
ஏற்காது
எனைவிட்டுச் செல்லாதே
செல்லாதே என் ஆருயிரே!

வெற்றி அளித்த வரிகள்; நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;
********************************************
தலைப்பு; டெங்குவை ஒழிப்போம்:
**************************************
கரும்புள்ளிகள் கொண்டவன்
வெண்மையாகவும் இருப்பான்
அதிகாலையில் தோன்றி
பகலில் மறைவான்
இரவில் உலாவும்
இரத்தக் காட்டேரி
சுத்த நீரில்
வசிக்கும் சுகவாசி
உலகை நடுக்கும்
கொடிய காலனவன்.
       காரைக்குடி கிருஷ்ணா

வெற்றி அளித்த வரிகள்;  நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்;                                                                       படம் சொல்லும் கவிதை:
**************************
சின்னஞ்சிறு சிட்டே!
எங்கு? வெகுதூரப்பயணம்!
வெற்றிக்கனியைப் பறித்திடவா?
இல்லை நாளைய
சரித்திரம் சமைக்கவா?
வெற்றியும் உனதானதோ?
காந்தியின் சுதந்திரக்
கனவும் நனவாகின்றதே!

       காரைக்குடி கிருஷ்ணா

வேண்டும்

வெற்றிச் சான்றிதழ் வழங்கிய ஊ....ல....ழ...குழுமத்திற்கு நன்றி.
*********--**************************
ஈற்றுச்சீர் போற்று:
********************
உயிர்கள் போற்றும் உன்னதம் வேண்டும்
மனிதம் கொண்ட மனங்கள் வேண்டும்
பொய்யர் இல்லா உலகு வேண்டும்
இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும்.

ஐல்லிக்கட்டு காளை

வெற்றி அளித்த வரிகள்: சிப்பிக்குள் முத்து குழுமத்திற்கு நன்றி :
***************************************
ஜல்லிக்கட்டு காளை: (இரட்டைக்கிளவி)
***********--*-***********
டும்டும் என மங்கள
வாத்தியம் முழங்க!
படபடவென பட்டாசு
வெடிக்க!
பளபளவென்ற வேட்டிகள்
அணிந்த நாட்டார்கள் சூழ!
மினுமினுப்பாக சீவிய
கொம்புடன்!
கொழுகொழுவென கொழுத்த
காளைகள்!
திமுதிமுவென ஓடிவர!
மடமடவென்று வீரர்கள் ஓடி
அதனை மடக்க!
சிலுசிலுவென்று கொம்பை
ஆட்டி!
திருதிருவென்ற கண்களால்
மிரட்டி
துருதுருவென்ற வீரர்களை
நோக்கி!
சீறிப் பாய்ந்தனவே.!

குறளோவியம் 8

குறளுக்கு புதுக்கவிதை எழுதத் தூண்டிய நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்:                    

குறளோவியம்: 8
********************
குறள் (கரப்பினுங் கையிகந்த்  தொல்லாநின் உண்கண்
உரைகல் உறுவதொன் றுண்டு)
********
காதல் இல்லையென்று
உன்வாய் மொழிதான்
சொல்கிறதடி!
ஓராயிரம் முறை
நீ எனைக் கடக்கும்
போதும்
ஒரு வார்த்தை கூட
பகரவில்லையடி !
நான் போகும் வழி
உன் பார்வை
எனைக் காண
தவறுவதில்லை!
நான் வரும்
பாதை நோக்கும்
உன் கண்களும்
எனைக் காணாமல்
வருந்துவதை
சொல்லாமல் சொல்கிறதே!
நீ எனைப் பிரிந்தால்
ஆதவனைக் காணா
தாமரையாய் உன்
காதல் உள்ளம்
வாடுவதை
என் உள்ளம்
அறியுமடி ! அன்பே.!
*****************************
குறள் : (நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.)
***********
கார்கால மழையாய்
அன்பைப் பொழிபவனே!
கண்ணின் மணியாய்
எனை வழிநடத்துபவனே!
உயிரின் உயிராய்
என்னுள் நிறைந்தவனே!
நாம் கூடிக்களித்த காலங்களின் நினைவுகளும்
என் நெஞ்சை வருடுகிறதே!
நீ எனை நீங்கி
ஒருநாளே ஆனாலும்
காட்சிகளும் மாறாமல்
கணப்பொழுதும்
யுகமாய் கழிகின்றதே!
உனை நினைத்தே
என்கை வளையும்
நெகிழுகின்றதே!
பனித்தூவும் காலமதிலும்
என்மேனி வெந்நீராய்
சுடுகின்றதே!
மணித்துளியும் நீளுகின்றதே!
மனமதுவும் உன்
இடந்தேடி உனைச்சேர
ஏங்குகின்றதே.!

       காரைக்குடி கிருஷ்ணா

*********

குறளுக்கு புதுக்கவிதை எழுதத் தூண்டிய நிலாச்சோறு குழுமத்திற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்:                    

குறளோவியம்: 8
********************
குறள் (கரப்பினுங் கையிகந்த்  தொல்லாநின் உண்கண்
உரைகல் உறுவதொன் றுண்டு)
********
காதல் இல்லையென்று
உன்வாய் மொழிதான்
சொல்கிறதடி!
ஓராயிரம் முறை
நீ எனைக் கடக்கும்
போதும்
ஒரு வார்த்தை கூட
பகரவில்லையடி !
நான் போகும் வழி
உன் பார்வை
எனைக் காண
தவறுவதில்லை!
நான் வரும்
பாதை நோக்கும்
உன் கண்களும்
எனைக் காணாமல்
வருந்துவதை
சொல்லாமல் சொல்கிறதே!
நீ எனைப் பிரிந்தால்
ஆதவனைக் காணா
தாமரையாய் உன்
காதல் உள்ளம்
வாடுவதை
என் உள்ளம்
அறியுமடி ! அன்பே.!
*****************************
குறள் : (நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.)
***********
கார்கால மழையாய்
அன்பைப் பொழிபவனே!
கண்ணின் மணியாய்
எனை வழிநடத்துபவனே!
உயிரின் உயிராய்
என்னுள் நிறைந்தவனே!
நாம் கூடிக்களித்த காலங்களின் நினைவுகளும்
என் நெஞ்சை வருடுகிறதே!
நீ எனை நீங்கி
ஒருநாளே ஆனாலும்
காட்சிகளும் மாறாமல்
கணப்பொழுதும்
யுகமாய் கழிகின்றதே!
உனை நினைத்தே
என்கை வளையும்
நெகிழுகின்றதே!
பனித்தூவும் காலமதிலும்
என்மேனி வெந்நீராய்
சுடுகின்றதே!
மணித்துளியும் நீளுகின்றதே!
மனமதுவும் உன்
இடந்தேடி உனைச்சேர
ஏங்குகின்றதே.!

       காரைக்குடி கிருஷ்ணா

*********

அப்பா அம்மா
*****************
உயிர் கொடுத்து
உலகினுக்கு காட்டி
அன்புமொழி பேசி
அறிவுபல புகட்டி
தூக்கம் துறந்து
தன்னுயிரும் ஈந்து
வள்ளுவன்வழி வாழ
அறவழி புகட்டியவர்கள்.
   காரைக்குடி கிருஷ்ணா

அப்பா அம்மா

அப்பா அம்மா
*****************
உயிர் கொடுத்து
உலகினுக்கு காட்டி
அன்புமொழி பேசி
அறிவுபல புகட்டி
தூக்கம் துறந்து
தன்னுயிரும் ஈந்து
வள்ளுவன்வழி வாழ
அறவழி புகட்டியவர்கள்.
   காரைக்குடி கிருஷ்ணா

கொஞ்சும் விழிகள்

கொஞ்சும் விழிகள்:
*******-***************
கன்னல் மொழியே!
கற்கண்டுச் சுவையே!
என்னிதயம் தன்னில்
இரண்டறக் கலந்தவளே!

மான்விழிப் பார்வை
என்மேனி துளைக்குதடி!
குறுந்தொகைப் பாடலாய்
உனது குறும்புப்பேச்சு
என்சிந்தை சிதைக்குதடி!

நெடுநல்வாடையாய் உனது
நினைவும் நீளுதடி
குளிர் தென்றலாய்
உன தணைப்பும்
மெய்மறக்கச் செய்யுதடி!

கொஞ்சல் மொழியில்
குழந்தையைப் பார்க்கிறேனடி!
அன்பு மழையில்
அன்னையைக் காண்கிறேனடி!

நீயெனைப் பிரிந்தால்
வான்மழை காணாப்பூமியாய்
என் வாழ்வதுவும்
வறண்டே போகுமடி.!

     காரைக்குடி கிருஷ்ணா

Monday, 18 December 2017

நிலையாமை

பூக்கின்ற பூவதுவும்
உதிர்ந்து போகும்!
தளிர்க்கின்ற தளிரும்
சருகாகும்!
உதிக்கின்ற சூரியனும்
மறைந்து விடும்!
கருமயிரும் வெண்மையாகும்!
கிழிந்த புடவையாய்
வாழ்துவும் நைந்தே
போகும்!
பிறப்பும் இறப்பும்
மாறி மாறி
சுழன்று வரும்!
நிலையில்லா உலகில்
நிலையானவன் இறைவனே!
அறமெனுந் தோணியேறி!
வினைக்கடலை நீந்தி!
நடுவுநிலை நின்று!
உயிர்களிடம் அன்புகாட்டி!
அவனடி சேர்ந்தால்
துன்பம் இன்றி
இன்பமாய் வாழ்ந்திடலாம்.!

     காரைக்குடி கிருஷ்ணா

அறம் பொருள் இன்பம் வீடு

அறம் பொருள் இன்பம் வீடு:
******************************
அறவழி நின்று!
அன்புமொழி பேசி!
மனத்தூய்மை அதனை
மனத்துள் நிறுத்தி!

பொய்ம்மை களைந்து!
பொறாமை நீக்கி
கடுஞ்சினம் ஒழித்து!
பேராசை தவிர்த்து!

எவ்வுயிரையும் தன்
உயிராய் மதித்து!
அயற்சி இன்றியே
அயராது உழைத்து!
பெற்ற பொருளதனை
கரவாது இல்லார்க்கு
உவகையுடன் ஈந்து!

பிறனில் விழையா
பேராண்மை கொண்டு!
கொண்ட மனையாளையும்
உயிரெனவே மதித்து!
பெற்ற மக்கட்கும்
மற்றவர்க்கும் அறநெறி காட்டி!

நாடி வந்தோர்க்கு
இன்முகம் காட்டி!
விருந்து அளித்து
ஒருபால் கோடாது!

நடுவுநிலை நின்று!
தனிமனித ஒழுக்கந்
தனையே திருவாய் மதித்து!
எல்லோரிடத்தும் நல்
இணக்கம் கொண்டு!

நட்பை வளர்த்து!
நலம்பல செய்து!
உன்னில் நீ
ஆனந்தம் அடைந்து!
இதயம் கனிந்தால்!
வீடு பேறடைதல்
திண்ணியமே.!

    காரைக்குடி கிருஷ்ணா

ஆழிப்பேரலை

கவிதை

ஆழிப் பேரலை

கவிதை

Sunday, 10 December 2017

ஹைக்கூ

கறைபடிந்த பூமி
புனிதம் அடைகின்றது
"மழைத்துளியால்".