Friday, 21 September 2018

அழகிய அசுரி அழகிய அசுரி
என் மனதுக்குள் நீயே அசரீரி

சுட்டுவிடும் மொட்டவிழும் வெட்கம் உனக்குமட்டும் எப்படி

உன்குறும்பும் குதூகலமும்
என் குற்றுயிருக்குள் ஜீவநதி/

கன்னல்களின் தித்திப்பில்
தொட்டுச்செய்த கன்னங்களில் கண்டேனடி
பிரம்மனின் கைவண்ணமும் கள்ளத்தனமும்/

மாநிற தேகமும்
மயக்கும் மான்விழியும்
ரசிக்கையில் உணர்ந்தேனே

இத்தனை நாள் எங்கிருந்தாய்
இன்பத்தேனே,நல்லுறவே
நட்பில் இல்லை நப்பாசை
மொத்தமாய் தித்திக்கும் உலகஅழகியே உன் பொய்களும் இனித்ததுவே.
குரல்வளமோ கருக்கருவா
சுருக்கென்று அறுக்கும் செவியில் கேட்டால் இரத்தநாளங்களில்.
பரவும் பரவசத்தின் பாசக்காரியே,,
உன்முகம் கண்டநொடி
பார்த்ததுபோலவும்
பழகிய உணர்வும் தோன்றியதே எவ்வாறோ/

ஆராய்ந்து அறிந்தேன்
உன்குரல்கள் வரைந்திட்ட
புகைப்படம் என்நெஞ்சுக்குள்ளும் இவ்வாறே இருக்கிறதே
அதனாலோ என்னவோ
கண்டதாய் ஞாபகம்.

பேருக்கேற்ற பேரழகியே
உன் கன்னத்திலொரு
கரும்புள்ளியாய் நானும் இருக்கிறேன் உணர்ந்தாயோ//

கண்ணாடிமுன் காணாமல்
கண்மூடி பார்
கவிதையோடு தெரிந்திடுவேன்

No comments:

Post a Comment