காவியத்தலைவனுக்கு இரங்கற் பா
***************************************
திருவாரூர் திருமகனே!
கலைமகளின் தலைமகனே!
கழகச் சூரியனே !
காந்தத் தமிழே!
காவியத் தாயின்
ஓவியமும் நீயே!
செம்மொழி காத்த
செம்மாந்த தமிழே!
எம்மொழியும் நீயே!
தமிழினத் தலைவனே!
தமிழை நீ எழுதியதால்
தகர வார்த்தையும்
தங்கமானது!
தமிழனாக நீ பிறந்தாய்!
தரணியில் தமிழனை
உயர்த்தி விட்டாய்!
தமிழ்மொழி உன்நாவினில்
நாதமாய் நடமாடியது!
கரைபுரளும் காவிரியாய்
காவியமும் தந்திட்டாய்!
ஓயாத தமிழே!
நீ ஓய்வெடுக்கச் சென்றாயோ!
மண்ணுலகில் மணித்தமிழ்
சமைத்த நீ
விண்ணுலகப் பணி
செய்யச் சென்றாயோ!
உதயசூரியன் உனது சின்னம்
கலைச்சூரியனும் நீதானே!
முத்தமிழ் படைத்த நீ
மூழ்கி விட்டாயோ!
மீளாத் துயரில்
எமை ஆழ்த்தி
மோகனத் தமிழ் படைக்க
மேலுலகம் சென்றாயோ!
தமிழாய் மீண்டுவருவாய்!
தமிழால் தரணியில்
ஆட்சி செய்வாய்!
என்றே நாங்களெல்லாம்
அமைதி கொண்டோம்!
ஆழ்கடலே அமைதி
கொள்வாய்.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment