தனிமையான
என் பயணங்கள்...!
பாலைவனமாம் என் மனதில்
பருவமழை போல்
பெய்தாய் நீ....!!
தனிமையில்
நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!!
உன் சந்தோஷங்களை
எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!!
சின்னதாய் இப்போது ஒரு
சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்....!!
நட்பாய் நீ என்
நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்....!!
உன் நட்பென்னும்
விரல் பிடித்து நடப்பதால் இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்....!!
நட்ப்போடு சாய்ந்துகொள்ள உன்
தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்....!!
ஆகாயம் ஒருநாள்
அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்....!!
ஆனாலும்
என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ.........
Wednesday, 8 August 2018
முத்துவின் கவீதை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment