அச்சம் தவிர்:
****************
வீரத்தமிழ் படைத்த வீரா!
கல்லணை கட்டிய கரிகாலா!
சீதையை மீட்ட
இராமனைப் போல்
காவிரியை மீட்டெடு!
இரத்தம் குடிக்கும்
மீத்தேன் திட்டத்தை
விரட்டியே தமிழ்
மண்ணைக் காத்திடு!
வீர விளையாட்டு
நமது அடையாளம்
அடையாள மதனைத்
தடை செய்பவர்களை
சட்டங்கள் செய்தே
தடை நீக்கிடு!
மொழிமீது படையெடுப்பவனை
தமிழ்ப் புலமையால்
வாகை சூடிடு!
அச்சம் கொள்ளாதே
ஒச்சம் அடைவாய்!
அடங்கி ஒடுங்கி
இருக்க நீயொன்றும்
அஞ்சும் ஆமையல்ல
புன்மைத் தேரையுமல்ல!
குன்றெனவே நிமிர்ந்து நில்
நேர்படவே பேசு
உன் விழிதனில்
உலகிற்கு ஒளிகொடு!
உடைமை மக்களுக்குப்
பொதுவே என்பதுணர்த்து!
இருப்பவன் இல்லாதவன்
என்பதில்லாமற் செய்!
தொகை தொகையாய்க்
கொள்ளையடித்த செல்வமெல்லாம்
அடுக்கடுக்காய் சிலபேரிடம்
நச்சுக் கனியாய்!
இளம் வீரா!
தீரத் தமிழா!
உன் தீரத்தால்
உடைமை யெல்லாம்
மக்களுக்குப் பொதுவாக்கிடு!
செயலைச் செய்துவிடு!
விளையும் பார்!
மாற்றம் உனதுடலில்!
புதுஇரத்தம் பாய
புரட்சிகள் செய்வாய்!
மானுடம் தழைக்க!
புதுஅகிலம் படைப்பாய்.!
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment