காத்திருக்கான் காத்திருக்கான்
விவசாயி காத்திருக்கான்
நல்லமழை பெய்யாதா?
விவசாயம் செழிக்காதா?
ஏக்கத்தில் விவசாயி
மடியில் விதையுடன்
ஏரிகுளம் காய்ஞ்சிருச்சு
வயல்வரப்பு வெடிப்பாச்சு
பூமியில் சூடும்
ஏறிப் போச்சு
பச்ச மரம்
வாடிப் போச்சு
மாடு மேய
புல் இல்லை
காடழிஞ்சு நாடு
பெருசாச்சு
காட்டு விலங்கும்
நாட்டுக்கு வந்தாச்சு
தண்ணீரும் இங்கே
காசாச்சு
தரணியில் எல்லாம்
மாறிப் போச்சு
நீ மட்டும் என்ன
விதி விலக்கா?
அடையாளம் தொலைந்து
அலைகின்றாய்
காலம் மாறி
வருகின்றாய்
காவல் தெய்வம்
நீ அல்லவா?
உனது இருப்பை
நிலை நாட்டி விடு.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment