அழகு அழகு
உன் காதல் அழகு
அழகு அழகு
உன் நினைவும் அழகு (2)
என்னுயிராய் ஆனவளே
என்மனதை ஆள்பவளே(2)
நெஞ்சினிலே நின்றுவிட்டாய்
நிம்மதியைத் தந்து விட்டாய்
கண்ணிரண்டில் உன்னை வைத்துக்
காலமெல்லாம் காத்திருப்பேன் (அழகு)
அன்னமே உன்னைக் கண்டேன்
அனுதினமும் தேடி வந்தேன்(2)
செம்பவளச் சிரிப்பழகே
சேர்த்தணைக்க வேண்டுமடி
அன்னநடை பயின்றவளே
ஆசையெல்லாம் தீர்ப்பவளே (2)
கண்ணே உன் காலடியில்
என்னுயிரைச் சேர்க்க வந்தேன்.(2)
மானே உன் கரம்பிடிக்க
மாமன் நானும் விரைந்து வந்தேன்
கருங்குயிலே கண்மணியே
காலத்தோடு வந்துவிடு.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment