நட்பும் பொய்
நகைப்பும் பொய்
அன்பும் பொய்
அனைத்தும் பொய்
சொல் வேறு
செயல் வேறாய்
எதோ ஒன்றை
எதிர்பார்த்தே
நகரும் கூட்டம்
கூடவே இருந்து
கொள்ளி போடும்
குறுங்கரடிக் கூட்டம்
உதட்டில் தேனும்
உள்ளத்தில் அரவின் நச்சும்
மனித மனங்களைக் கொன்று
பிணத்தின் மீதேறி
பணத்தை நாடும்
யார் இருந்தால் என்ன?
யார் இறந்தால் என்ன?
பணம் ஒன்றே
பிரதானம்
இந்த மனித
மிருகங்களை
அடையாளம் காண்பதற்குள்
கொண்ட இலட்சியமும்
கானல் நீராய்
வாழ்வதுவும் முடிந்தே தீரும்.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment