Thursday, 26 September 2019

சமூகப்பார்வை

சமூகப் பார்வை
******--------******
மனிதம் மறந்த மக்கள் கூட்டம்
வணிகம் ஒன்றே வாழ்வின் நோக்கம்
படிப்பின் எல்லை பணத்தின் ஏக்கம்
அடிமையும் அச்சமும் அகல வில்லையே

மதுவும் மதமும் மாறியபா டில்லை
சிந்தனை தூண்டும் இணையமு மில்லை
தண்டனை தவறைக் குறைப்பது மில்லை
இந்தநிலை மாற இயம்புவா ரில்லையே

வாய்மையு மில்லை வண்மையு மில்லை
பொய்ய ருலகில் புண்ணிய மில்லை
குண்டு குழியில்லா சாலைக ளில்லை
தொண்டுகள் செய்ய துணிவு மில்லையே

களவும் கையூட்டும் குறையவே  இல்லை
கலப்படம் இல்லாப் பொருளு மில்லை
வல்லுறவு என்பது வாடிக்கை யாச்சு
தொல்லுலக மாண்பும் தொலைந்தே போச்சே.

        காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment