Thursday, 26 September 2019

கலங்காதே கண்ணா

கலங்காதே கண்ணே
**************************
மன்னை அரசியே
    மனிதம் நிறைந்தவளே
என்னடி சிந்தனை?
      ஏனிந்த வேதனை?

பெண்வழிச் சமூகம் மறந்தான்
      பெண்மை சிதைக்கின்றான்
பேடிமை கற்கின்றான்
     
அம்மா என்கின்றான்
     அகத்தே வேறாகின்றான்
தமக்கை என்றழைப்பான்
      தனிமையில் தொட்டிடத் தவிப்பான்

சிறுமியையும் விடமாட்டான்
      சிறுமனம் படைத்தான்- இந்த
சீர்கெட்ட மனிதனைத்
     திருத்தவா யோசனை?

மயங்காதே தோழி
     மதிகெட்ட மனதை மாற்ற
நல்வழி காட்ட
     நன்னெறி புகட்ட

நாளும் இதையோதிட
    அன்பென்ற ஆயுதம் கொண்டு
ஆசிரியப்பணி நின்று
   
மாண்புமிகு மாணவச்சமூகம் படைப்போம்
      மன்பதை காப்போம்
கலங்காதே கண்ணே
     காலம் கனிவது திண்ணம்.

           அன்புடன் : காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment