Thursday, 26 September 2019

எத்தனை எத்தனை முகங்கள் மனிதருள்
இத்தரை மீதினில் எண்ணில்
அடங்கா
அன்பாய் அழகாய் அரக்கராய் சிலமுகம்
அன்னையாய் ஆண்டவனாய் அகிலத்தில் பலமுகம்
பொய்யராய்ப் புலையராய் பாரினில் பலவிதம்
இத்தனை மனிதரைக் கடப்பது எங்ஙனம்
முகங்கள் அறிந்திடு முகத்திரை கிழித்திடு
மனிதனாய் வாழ்ந்திடு
மன்பதை காத்திடு.

   காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment