பள்ளிக்கூடம் போவோம்
பாடம் நன்கு படிப்போம்
ஒழுக்கம் அதைக் கற்போம்
ஓங்கி உலகில் வாழ்வோம் -(பள்ளி)
நல்வழியை நாடுவோம்
நலமுடனே வாழுவோம்
வான்மறையும் ஓதுவோம்
வாழ்வினிலே உயருவோம் (பள்ளி)
சேருமிடம் சேர்ந்திடுவோம்
சிறப்புடனே வாழ்ந்திடு வோம்
அன்புநெறி போற்றிடுவோம்
அறவழியில் வாழ்ந்திடுவோம்.( பள்ளி)
காரைக்குடி கிருஷ்ணா