தாயெனும் பெண்:
***********************
ஓடி யுழைத்து
உதிரம் தன்னை
உணவாக்கி
உயிர் சுமந்து
குலம் காக்கும்
உன்னதப் பிறவி
ஒருநொடி கூட
தனக்கென வாழா
தன்னிகர் இல்லா
தனிப் பிறவி
இடியென துன்பம்
வரினும்
இனிதே ஏற்கும்
இவள்
பிள்ளையின் சிற்றெரும்புக்
கடிக்கே
சிதறிப் போவாள்
மற்றவரின் துன்பத்தில்
தோள் கொடுக்கும்
இவள் தன்
இன்ப துன்பத்தை
வெளிக் காட்டா
ஆழ்கடல் அதிசயம்.
காரைக்குடி கிருஷ்ணா
(அனைத்துப் பெண்களுக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள் :)
No comments:
Post a Comment