Saturday, 17 March 2018

எங்கும் தமிழென முழங்கு

18 -02 -2018: தமின்னைத் தமிழ்ச் சங்கம்:
***------********* கவியரங்கக் கவிதை:
************************
தலைப்பு: எங்கும் தமிழென
முழங்கு:
*****************************
கலித்தாழிசை:
******************
அகத்தியன் தந்த அமுதத் தமிழே
செகத்தின் மூத்த செம்மை மொழியே
பொதுமறை கண்ட பொதிகைத் தமிழே
ஏதுனக்கு ஈடே, எட்டுத் திக்கும்
ஏறுநடை போடும் எந்தை மொழியே
வறுமை அறியா வஞ்சியும் நீயே
கன்னித் தமிழே கன்னல் மொழியே
மேன்மை கொண்ட மென்மைத் தமிழே
என்றும் புதிதாய் இனிமை நல்கும்
வன்திறல் கொண்ட வண்மொழி வாழியவே
எங்கும் உனது ஏற்றம் கொண்டு
ஓங்குக தமிழே என்றும் ஒளிர்க தமிழே!.

       காரைக்குடி கிருஷ்ணா

No comments:

Post a Comment