எத்தனை எத்தனை
முகங்கள் மனிதருள்
இத்தரை மீதினில்
எண்ணில்அடங்கா
அன்பாய் அழகாய்
அரக்கராய் சிலமுகம்
அன்னையாய் ஆண்டவனாய்
அகிலத்தில் பலமுகம்
பொய்யராய்ப் புலையராய்ப்
பாரினில் பலவிதம்
இத்தனை மனிதரைக்
கடப்பது எங்ஙனம்
முகங்கள் அறிந்திடு
முகத்திரை கிழித்திடு
மனிதனாய் வாழ்ந்திடு
மன்பதை காத்திடு.
காரைக்குடி கிருஷ்ணா
No comments:
Post a Comment