Friday, 21 September 2018

கலைஞருக்கோர் கவிதாஞ்சலி

கலைஞருக்கோர் கவிதாஞ்சலி:
********************
திருக்குவளை தந்த தீராச் சுடரே
கருவறையில் கன்னித்மிழ் கற்றே வந்தாயோ?
கழகச் சூரியனே காந்தத் தமிழே!
பழந்தமிழ் காத்த பண்பட்ட் பாவலரே!

வேதம் நிறைந்த வீரநாட்டில் நிந்தன்
பாதம் பார்த்துப் பழகி வந்தோம்!
செம்மொழி கண்ட செம்மாந்ததமிழே!
எம்மொழியும் நீயே ஏகாந்தத் தலைவரே!

பரணி கண்ட பைந்தமிழ்ப் புலவரே!
தரணியில் தமிழைத் தங்கமாக உயர்த்திட்டாய்!
திரையும் வணங்க திசையெட்டும் ஒலிக்க
கரைபுரளும் காவிரியிய் காவியமும் தந்திட்டாய்!

அஞ்சுகத்தாய் பெற்ற அஞ்சா நெஞ்சே!
நெஞ்சுக்கு நீதியாய்நின்ற நிகரிலாத் தலைவரே!
தொல்காப்பியப் பூங்காவும் தொன்தமிழ் உரைக்கும்!
நல்லுரை வள்ளுவம் நற்றமிழ் காத்திடும்!

குறளோவியம் தந்தாய் குமரிக்கோட்டமும் தந்தாய்!
மறவழித் தமிழா மறைந்தே போனாயோ?
சமத்துவபுரம் தந்த சமத்துவக் கோமானே!
எமனும் உம்மை ஏமாற்றிச் சென்றானோ?

பட்டிதொட்டி யெல்லாம் பவளத் தமிழால்
கட்டிப் போட்டீர் கழகச் சிங்கங்களை
பார்புகழும் பைந்தமிழ்ப் பகலவனும் நீயே!
கார்மேகமாய் விண்ணில்    கரைந்து சென்றாயோ?

எத்திக்கும் உன்தமிழால் ஏகமாய் நிறைந்தாய் !
முத்தமிழ் வித்தகனே மூழ்கியே விட்டாயோ?
கலங்கரை விளக்கமாய் காலமும் காத்தாய்!
கலங்கி நிற்கிறோம் கனத்த இதயத்துடன்!

வங்கக் கடலோரம் வாஞ்சையுடன் நீயுறங்க"
பொங்கு தமிழும் புலம்பித் தீர்க்குதய்யா!
தன்னே ரில்லாத் தமிழினத் தலைவா!
இன்றே வாராயோ? இன்தமிழ் தாராயோ?

தமிழாய் மீள்வாய் தரணி ஆள்வாய்!
அமிழ்தே அழகே ஆழ்கடலே அமைதி கொள்வாய்!.

         காரைக்குடி கிருஷ்ணா

அழகிய அசுரி அழகிய அசுரி
என் மனதுக்குள் நீயே அசரீரி

சுட்டுவிடும் மொட்டவிழும் வெட்கம் உனக்குமட்டும் எப்படி

உன்குறும்பும் குதூகலமும்
என் குற்றுயிருக்குள் ஜீவநதி/

கன்னல்களின் தித்திப்பில்
தொட்டுச்செய்த கன்னங்களில் கண்டேனடி
பிரம்மனின் கைவண்ணமும் கள்ளத்தனமும்/

மாநிற தேகமும்
மயக்கும் மான்விழியும்
ரசிக்கையில் உணர்ந்தேனே

இத்தனை நாள் எங்கிருந்தாய்
இன்பத்தேனே,நல்லுறவே
நட்பில் இல்லை நப்பாசை
மொத்தமாய் தித்திக்கும் உலகஅழகியே உன் பொய்களும் இனித்ததுவே.
குரல்வளமோ கருக்கருவா
சுருக்கென்று அறுக்கும் செவியில் கேட்டால் இரத்தநாளங்களில்.
பரவும் பரவசத்தின் பாசக்காரியே,,
உன்முகம் கண்டநொடி
பார்த்ததுபோலவும்
பழகிய உணர்வும் தோன்றியதே எவ்வாறோ/

ஆராய்ந்து அறிந்தேன்
உன்குரல்கள் வரைந்திட்ட
புகைப்படம் என்நெஞ்சுக்குள்ளும் இவ்வாறே இருக்கிறதே
அதனாலோ என்னவோ
கண்டதாய் ஞாபகம்.

பேருக்கேற்ற பேரழகியே
உன் கன்னத்திலொரு
கரும்புள்ளியாய் நானும் இருக்கிறேன் உணர்ந்தாயோ//

கண்ணாடிமுன் காணாமல்
கண்மூடி பார்
கவிதையோடு தெரிந்திடுவேன்

Tuesday, 18 September 2018

நீ..தானே
$$$$$$$$$

நீ..தானே....
என்னுள் வாழும் உயிரே!
நீ...தா...னே....
என்னுள் வளரும் காதல் தீயே!
நீ...தானே...
என்றென்றுன் என் கனவில்!
நீ..தா..னே...நினைவுகள் தந்த உறவில்..உறவில்!

காதலினால்...காதலினால்
கரைந்து போகுது மனதே..மனதே..!
ஆதலினால்..ஆதலினால்
உயிரில் கலந்து உருகுது உணர்வே!

உன்மூச்சு சுவாசம்தான்
என்னோடு பேசும் பேசும்!
உன்வேர்வை வாசம்தான்
என்னோடு வாழும்..வாழும்!

வான்மேகம் தாலாட்ட
விழிமூடிடுவேனே உன் நெஞ்சில்!
விழியிரண்டும் திறந்திட
கனவுகள் தொடர்ந்திட
கலைந்திடுமோ...வளர்ந்திடுமோ?

நீ..தானே..என்னுள் வாழும் உயிரே..உயிரே...
நீ...தா...னே...என்னுள்
வளரும் காதல் தீயே..தீயே....!
நீ..தானே என்றென்றும் என் கனவில்...கனவில்....
நீ..தா..னே....நினைவுகள் தந்த உறவில்...உறவில்!!

Saturday, 8 September 2018

கலைஞருக்கு இரங்கற் பா

காவியத்தலைவனுக்கு இரங்கற் பா
***************************************
திருவாரூர் திருமகனே!
கலைமகளின் தலைமகனே!
கழகச் சூரியனே !
காந்தத் தமிழே!
காவியத் தாயின்
ஓவியமும் நீயே!

செம்மொழி காத்த
செம்மாந்த தமிழே!
எம்மொழியும் நீயே!
தமிழினத் தலைவனே!

தமிழை நீ எழுதியதால்
தகர வார்த்தையும்
தங்கமானது!
தமிழனாக நீ பிறந்தாய்!
தரணியில் தமிழனை
உயர்த்தி விட்டாய்!

தமிழ்மொழி உன்நாவினில்
நாதமாய் நடமாடியது!
கரைபுரளும் காவிரியாய்
காவியமும் தந்திட்டாய்!

ஓயாத தமிழே!
நீ ஓய்வெடுக்கச் சென்றாயோ!
மண்ணுலகில் மணித்தமிழ்
சமைத்த நீ
விண்ணுலகப் பணி
செய்யச் சென்றாயோ!

உதயசூரியன் உனது சின்னம்
கலைச்சூரியனும் நீதானே!
முத்தமிழ் படைத்த நீ
மூழ்கி விட்டாயோ!

மீளாத் துயரில்
எமை ஆழ்த்தி
மோகனத் தமிழ் படைக்க
மேலுலகம் சென்றாயோ!

தமிழாய் மீண்டுவருவாய்!
தமிழால் தரணியில்
ஆட்சி செய்வாய்!
என்றே நாங்களெல்லாம்
அமைதி கொண்டோம்!
ஆழ்கடலே அமைதி
கொள்வாய்.!
     காரைக்குடி கிருஷ்ணா