வீணையடி நீயெனக்கு:
*********************-****
பாவகை: கலித்தாழிசை :
**************************
கண்ணின் ஒளியே
காட்சியும் நீயே!
விண்ணின் நிலவே
விந்தைப் பெண்ணே
துன்பம் நீக்கும்
தூயவளே எந்தன்
இன்பமும் நீயே!
இதயமும் நீயடி!
காற்றின் கீதமே
கானக மயிலே
ஏற்றமும் நீயடி!
என்னுயிரும் நீய்டி!
எந்தன் விழியே
இசைக்கும் குயிலே
மந்திரச் சொல்லே!
மனதின் ஒலியே!
நாதமாய் என்னுள்
நர்த்தனம் செய்கின்றாய்
வேதமாய் நின்றே
வினைபல புரிகின்றாய்
உடலுள் உயிராய்
உறைந்தே கிடக்கின்றாய்
திடமாய் நெஞ்சில்
நிறைந்தே இருக்கின்றாய்
வஞ்சியே வண்டமிழ்ப்
பாவையே வரமே
தஞ்சமே என்றன்
தரணியும் நீயே
சிறுநெருஞ்சிப் பூவே
சித்திரச் சிலையே!
வறுமை அறியா
வஞ்சித் தமிழே!
வாழ்வாங்கு வாழவே
வான்மழையாய் வந்தவளே!
வாழ்த்துமடி நம்மை
வானகமும் வையகமும் என்றுமே.
காரைக்குடி கிருஷ்ணா