Tuesday, 28 August 2018

வீணையடி நீயெனக்கு

வீணையடி நீயெனக்கு:
*********************-****
பாவகை: கலித்தாழிசை :
**************************
கண்ணின் ஒளியே
காட்சியும் நீயே!
விண்ணின் நிலவே
விந்தைப் பெண்ணே

துன்பம் நீக்கும்
தூயவளே எந்தன்
இன்பமும் நீயே!
இதயமும் நீயடி!

காற்றின் கீதமே
கானக மயிலே
ஏற்றமும் நீயடி!
என்னுயிரும் நீய்டி!

எந்தன் விழியே
இசைக்கும் குயிலே
மந்திரச் சொல்லே!
மனதின் ஒலியே!

நாதமாய் என்னுள்
நர்த்தனம் செய்கின்றாய்
வேதமாய் நின்றே
வினைபல புரிகின்றாய்

உடலுள் உயிராய்
உறைந்தே கிடக்கின்றாய்
திடமாய் நெஞ்சில்
நிறைந்தே இருக்கின்றாய்

வஞ்சியே வண்டமிழ்ப்
பாவையே வரமே
தஞ்சமே என்றன்
தரணியும் நீயே

சிறுநெருஞ்சிப் பூவே
சித்திரச் சிலையே!
வறுமை அறியா
வஞ்சித் தமிழே!

வாழ்வாங்கு வாழவே
வான்மழையாய் வந்தவளே!
வாழ்த்துமடி நம்மை
வானகமும் வையகமும் என்றுமே.

       காரைக்குடி கிருஷ்ணா

மண்மகள் காப்போம்

மண்மகளே அழகே
மண்ணுயிர் காக்கும்
விண்ணரசியே எங்கள்
வித்தே உயிரே
உன்னைக்
காக்க
வில்லை என்றால்
மனிதமும் இங்கே
மறித்து விடுமே.

          காரைக்குடி கிருஷ்ணா

Wednesday, 8 August 2018

முத்துவின் கவீதை

தனிமையான
என் பயணங்கள்...!

பாலைவனமாம் என் மனதில்
பருவமழை போல்
பெய்தாய் நீ....!!

தனிமையில்
நடந்த எனக்கு
நட்புக்கரம் தந்து
நிழல் போல் துணையானாய்....!!

உன் சந்தோஷங்களை
எனக்கு பரிசளித்து விட்டு
என் கவலைகளை நீ
களவாடிச் செல்கிறாய்....!!

சின்னதாய் இப்போது ஒரு
சிறகு முளைத்ததாய் உணர்வு...!
உன் நட்பு கிடைத்தபின்
உயரத்தில் பறக்கிறேன் நான்....!!

நட்பாய் நீ என்
நரம்புகளில் பாய்கிறாய்...!
தோழியாய் நீ என்
சுவாசமாகிறாய்....!!

உன் நட்பென்னும்
விரல் பிடித்து நடப்பதால்  இனி
விண்வெளிக்கு மேலே சென்று
விளையாடி வருவேன்....!!

நட்ப்போடு சாய்ந்துகொள்ள  உன்
தோள்கள் இருப்பதால் இனி
தோல்விகளை கூட
தோற்கடித்து விடுவேன்....!!

ஆகாயம் ஒருநாள்
அழிந்து போகலாம்...!
உலகம் ஒருவேளை
உடைந்து போகலாம்....!!

ஆனாலும்
என் ஆயுள் முடியும் வரை
எனக்கு வேண்டும்...!
என் தோழியாய் நீ.........