"வானமே எல்லை"
*********************
நம்பிக்கை வை ,நம்பிக்கை வை
இதயமெனும் வைர பதக்கத்தில்
விதியை வெல்லும் மந்திரம் -அது நெஞ்சினில் உள்ள தந்திரம்
உன்னைச் சுற்றியுள்ள பந்தத்தை
நல்லாற்றலால் தூய்மைப் படுத்து
பிறகு உன்னில் தோன்றும்
தீர்க்கமான நேர்மையான எண்ணங்கள்
தாமதம் வேண்டாம் தலைதட்டும்
இடைவிடாது எண்ணிய எண்ணத்தை
முயற்சி செய்
வகுடெடுத்த முடிபோல
வாகாய் எல்லாம் அமையும் பார்
பின்னமில்லை பிணக்கமில்லை வீறுகொண்டு செயல்படுத்து
உடலும் அதுவே
உயிரும் அதுவே
என்றும் நினைவில் நிறுத்து
ஏற்றிய பொறி எக்காலமும்
அணையா இன்பப் பேரொளி
விரிந்து விரிந்து செல்லும்
வானம் மட்டும் எல்லை இல்லை
இருண்ட பேரண்டமும் தாண்டி
வெட்டவெளிதானே உனதெல்லை.
காரைக்குடி கிருஷ்ணா