பெண்மை போற்றும் தேசம்
வெறும் பெயரளவில் மட்டுமே
பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கடற்கரை மணலைப்போல
கணக்கிலடங்கா!
Saturday, 31 December 2016
பெண்ணியக் கவிதைகள்
Sunday, 25 December 2016
மாணவர் கவிதை
கொஞ்சும் அழகும்
பிஞ்சு மொழியும் கூடிய
இளஞ்சிறார்களே !
விளையாட்டாய்ப் பேசி வீணில் முடியும்
விவாதம் அது வேண்டாமே !
உன் சிந்தையில் உதிக்கும்
சிலவற்றை ஊன்றிக் கவனி !
சிகரத்தைத் தொடலாம் நீ !
இந்த அவசர உலகில் அத்தனைக்கும் அவசரம்
அமைதிதானே வேண்டும் நாம் வாழ்வில் உயர
மனிதனாய்ப் பிறந்தால் மட்டும் போதாது ? இந்நாள்
மகத்தான வெற்றியின் மைல்கல் வேண்டும் நம் பின்னால் !
நான் வாழணும், இல்லை நாம் வாழணும்
இதுதானே நம் முன்னோர் கண்ட சூத்திரம்
உயிர் வாழ்வதற்காக உண் !
உண்பதற்காக வாழாதே !
நல்லது கெட்டது கற்று உணரு !
நாலு நல்ல விஷயம் தெரியும் பாரு !
நிலாச்சோறு ஊட்டும் கதை அது வேண்டாம் !
கண்டதையும் ரசிக்கலாம் அது காக்கையின் எச்சம் !
அதனால் நமக்கு என்ன மிச்சம் !
பண்புகள் ஆயிரம் உன்னிடம் கொட்டிக் கிடக்கு !
அன்புதானே உன் ஆயுதம் எதிரியை மடக்க !
உலகத்தை ஆளப்பிறந்தவனே !
இந்த உலகத்தில் அனைவரும் - உன்
உடன்பிறப்புதானே !
உள்ளதைச் சொல் !
உண்மையை உணர் !
செழுமையாய்ச் சிரி !
சிறப்பாய் வாழ் !.....
Wednesday, 21 December 2016
Subscribe to:
Posts (Atom)