Saturday, 31 December 2016

பெண்ணியக் கவிதைகள்

பெண்மை போற்றும் தேசம்
வெறும் பெயரளவில் மட்டுமே
பெண்ணினத்துக்கு இழைக்கப்படும் கொடுமைகள் கடற்கரை மணலைப்போல
கணக்கிலடங்கா!

Sunday, 25 December 2016

மாணவர் கவிதை

                                                            
                       

கொஞ்சும் அழகும் 
பிஞ்சு மொழியும் கூடிய 
இளஞ்சிறார்களே !
விளையாட்டாய்ப் பேசி வீணில் முடியும் 
விவாதம் அது வேண்டாமே !
உன் சிந்தையில் உதிக்கும் 
சிலவற்றை ஊன்றிக் கவனி !
சிகரத்தைத் தொடலாம்  நீ !
இந்த அவசர உலகில் அத்தனைக்கும் அவசரம் 
அமைதிதானே வேண்டும் நாம் வாழ்வில் உயர 
மனிதனாய்ப் பிறந்தால் மட்டும் போதாது ? இந்நாள் 
மகத்தான வெற்றியின் மைல்கல் வேண்டும் நம் பின்னால் !
நான் வாழணும், இல்லை நாம் வாழணும் 
இதுதானே நம் முன்னோர் கண்ட சூத்திரம் 
உயிர்  வாழ்வதற்காக உண் !
உண்பதற்காக வாழாதே !                       
நல்லது  கெட்டது கற்று உணரு !
நாலு நல்ல விஷயம்  தெரியும் பாரு !
நிலாச்சோறு ஊட்டும் கதை அது வேண்டாம் !
கண்டதையும் ரசிக்கலாம் அது காக்கையின் எச்சம் !
அதனால் நமக்கு என்ன மிச்சம் !
பண்புகள் ஆயிரம் உன்னிடம் கொட்டிக் கிடக்கு !
அன்புதானே உன் ஆயுதம் எதிரியை மடக்க !
உலகத்தை ஆளப்பிறந்தவனே !
இந்த உலகத்தில் அனைவரும் - உன் 
உடன்பிறப்புதானே !
உள்ளதைச் சொல் !
உண்மையை உணர் !
செழுமையாய்ச் சிரி !
சிறப்பாய் வாழ் !.....  
     

Wednesday, 21 December 2016

ஹைக்கூ

பங்காளிச் சண்டையில்
பதறிப் போனாள்.....
"காவிரித்  தாய்".

Tuesday, 20 December 2016

ஹைக்கூ

சொந்தங்கள் எல்லாம்
தொலைந்து போயின -இவைகள்
சொந்தமானதால்
''சொத்துக்கள்''


ஹைக்கூ

இரவை வரவேற்க
இயற்கை இட்ட வண்ணக்கோலங்கள்
''விண்மீன்கள்''
-கவிஞர் கிருஷ்ணா